Skip to main content

கல் தோன்றி, மண் தோன்றா


 “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி” 


இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.  


முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘அறியப்படாத தமிழ்மொழி’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.  



அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)  


சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது. 


பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்? 

வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீர் கையகலக் 

கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, 

வாளோடு முன்தோன்றி மூத்த குடி!


இந்த பாடல் வரும் சூழலும் முக்கியம்.  தமிழ் ஆதி குடிமக்கள்  வெட்சி  - ஆநிரைகளைக் கவரும் குழு,  கரந்தை - ஆநிரைகளை இழக்காது காக்கும் குழு என இரு வேறு குழுக்களாக பிரிந்து போரிடுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திய இயக்குனர் வசந்தபாலனின்  'அரவான்' திரைப்படத்தை சுட்டுகிறார் கரச.



பாடலின் பொருள்:  ஆதியில் உலகம் நீர் போர்த்தி இருந்து, பின்பு வாழ்வு துவங்கிற்று. முல்லை/குறிஞ்சி (கல்) தோன்றி, மருத நாகரிகம் (மண்,  வயல்) தோன்றாத காலத்தே, கையில் வாளோடு வெளிப்பட்டு, வீரமாக ஆநிரை (பசு மாடுகளை) காக்கிறார்களே, கரந்தைத் திணையில்! வாழ்க இந்த ஆதிகுடிகள்! 


இதைப் போல நிறைய குழப்பமான  விஷயங்களை  தெளிவுபடுத்த 14 கட்டுரைகள் எழுதி இருக்காரு. தமிழர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். 


 -திரு


#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை


மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன் 


facebook.com/#ஆஸிதமிழன் 

fb.com/#ஆஸிதமிழன்


Comments